Monday, February 02, 2009

தொடர்பு சாதனங்கள்

என்.சரவணன்

சிங்கள இனவாத அணியில் உள்ள முக்கிய விடயம் தொடர்பு சாதனங்கள். இனவாதத்தை தூண்டுவதில் இவை முக்கிய பாத்திரமாற்றி வருகின்றன. மக்களின் சித்தாந்தத்தை தீர்மானிப் பதாகவும், சிந்தனையை வழிநடத்துவ தாகவும் இவையே உள்ளன. எனவே இவற்றை இலகுவாக அலட்சியம் செய்து விட முடியாது.

பத்திரிகைகள்

தினசரி பத்திரிகைகளில் முக்கியமாக மூன்று உள்ளன. பேரினவாதத்தைக் கக்குகின்ற ”வத்மன”, ”சட்டன”, ”திரி சிங்களே”, ”சிங்கள பௌத்தயா” என்பனவும் வெளிவருகின்ற போதும் கருத்தை உருவாக்கும் வலிமை இந்த தினசரிகளுக்கே உண்டு.

தினமின - அரசு சார்பு லேக் ஹவுஸ் பத்திரிகை. ”புலிகளுக்கு எதிரான நடவடிக்கை” எனும் பேரில் தமிழ் மக்களின் மீதான அரச பயங்கரவாதத் தை மறைக்கும் அல்லது நியாயப்படுத் தும் வேலையை இது செய்து வருகிறது.

திவய்ன - உப்பாலி பத்திரிகை நிறுவனத்தின் பத்திரிகை. இதன் உரிமையாளர் ஒரு ஆயுத வியாபாரி என்பது கடந்த காலங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. இதை அம்பலப்படுத்துவதில் முக்கியமாக முன்னின்றவர் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன். சகல இனவாதிகளுக்கும் இது களமமைத்துக் கொடுத்துள்ளது. மிகவும் மோசமான முறையில் நேரடியாக இனவாதத்தைக்கக்குகின்ற, பாரிய விற்பனையுள்ள பத்திரிகை. உரிமையாளர் தனது ஆயுத வியாபாரத்தை செவ்வனே நடத்த வேண்டுமெனில் இந்த யுத்தத்தை ஊக்குவித்தல் வேண்டும். அதற்கு சிங்கள மக்களை உசுப்பி விட வேண்டும். இனவாதத்தை பரப்புவதற்காகவே இந்த பத்திகைகையை நடத்தப்படுகிறது என்றும் கூறுவர். இதன் உரிமையாளர் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர் என்ற போதும் ஜனாதிபதியாலேயே ஆயுத வியாபாரி என வர்ணிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லங்காதீப- இது விஜய நிறுவனத்தினது. இது திவய்ன அளவு இல்லாவிட்டாலும் இனவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சளைத்ததல்ல. இதன் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினர் என்பதும் அதற்காகவே இந் நிறுவனத்தின் ஏனைய பத்திகைகளான Sunday Times, Midweek Mirror போன்ற பத்திகைகள் ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் கூறலாம். இதன் உரிமையாளரையும் ஆயுத வியாபாரத்துடன் சம்பந்தப்படு த்தி கதைப்பது வழக்கம். ஆனால் திவய்னவை நிரூபித்ததைப் போல் இதனை நிரூபிக்க முடியவில்லை.

வானொலி

இது தவிர வானொலியை எடுத்துக்கொண்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையோடு அதன் ஸ்ரீ லங்கா எப்.எம் மற்றும் விஷ்வ ஷ்ரவணி எனும் சேவையும் அரசு சார்பு சேவைகளாக இயங்குகின்றன. இவற்றைத் தவிர சிரச, லக்ஹண்ட, சவண, ரஜரட்ட ஆகிய தனியார் சிங்கள வானொலி சேவைகளும் Yes FM, Capitol Radio, FM 99, TNL, Radio போன்ற தனியார் ஆங்கில வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இவை அனைத்தும் மிகவும் பேரினவாத சார்பான முறையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றன.

தொலைக்காட்சி

தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் ரூபவாஹினி, ஐ.டீ.என். ஆகியவை அரசு சார்பு நிறுவனங்களாகவும் ஸ்வர்ணவாகினி, Dyna Vision, ETV, TNL, MTV, BBC போன்ற தனியார் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றிலும் இனவாத சார்புடைய நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன.

தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதாவது காட்டப்பட்டாலும் அவை தமிழ் மக்களின் நலன்களை முற்றுமுழுதாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை. எப்போதாவது நடக்கும் ஓரிரு கலந்துரையா­டல்க­ளில் மட்டும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ரூபவாஹினி, ஐ.டீ.என். ஆகிய அரசு சார்பு சேவைகளில் மாத்திரமே தமிழ் செய்திகளும் காண்பிக்கப்பட்டு வருகின்றன. டீ.என்.எல். எம்.டீ.வி ஆகியவற்றில் சிங்கள மொழியில் அரசு சார்பற்ற செய்திகள் வெளியிடப்பட்ட போதும் தமிழில் அப்படியான வாய்ப்புகள் எதுவுமில்லை.

மொத்தத்தில் இந்த தொடர்பு சாதனங்கள் அத்தனையும் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இல்லை. அவை ஏற்கெனவே கட்டியெழுப்பப்பட்டுள்ள சிங்கள பேரினவாதத்­துக்கு தேவையான இனவாத தாகத்தை தணிக்கும் கடமையை - அந்த இயுடைவெளியை நிரப்பும் பணியையே செய்து வருகின்றன. தமது இனவாத சார்புக் கொள்கை, மூலதனத்தை பெருக்குதல், ஆயுத வியாபாரம், அரசியல் லாபம் என்பனவற் றுக்காக முழு மக்களையும் பலிகொடுத் துக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all