Sunday, February 01, 2009

பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தின் தேசிய வேலைத்திட்டம்


என்.சரவணன்


இத்திட்டம் பிரதானமாக ஐந்து தலைப்புக்களை உள்ளடக்கியது.

அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

”...தமிழ் இனவாதத்தினால் வழிநடத்தப்­படும் பயங்கரவாதம் இன்று முழு ஸ்ரீலங்கா­வையும் விழுங்கிவிட்டுள்ளது. அதன் முதல் இலக்கு ஸ்ரீலங்காவின் வட கிழக்குப் பகுதிகளில் தமிழ் ஈழத்தை அமைத்துக் கொள்வது. இரண்டாவது முழு ஸ்ரீ லங்காவையும் கைப்பற்றுவது. அதன்பின் தென்னாசியாவை உலகின் தமிழ் அரசாக உருவாக்கி விடுவது. எனவே தான் இதற்காக இலங்கைக்­குள்ளும், இந்தியாவிலும் கிழக்கா­சியாவிலும் மேற்குலக நாடுகளிலும் கோட்­பாட்டு ரீதியில் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் என்பவற்றுடன் சேர்த்து இராணுவ நடவடிக்­கை­களிலும் ஈடுபட்டு வருகின்றனர்....

...புராதனம் தொட்டு பல்வேறு ஆக்கிர­மிப்புகளுக்கு முகம்கொடுத்து வந்தாலும் எமது தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறோம் நாம். தமிழ் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தலைமை கொடுப்போம். அதற்கு முன்நிபந்தனையாக தமிழ் இனவாதத்தையும் புலிப் பங்கர­வாதத்தையும் முற்றாக ஒழித்துக்­கட்டுவதற்­காகவே இன்று தேசிய திட்டமொன்றை முன்வைத்துள்ளோம்.

இது எமது கொள்கையை அடிப்­படை­யாக வைத்து அமைக்கப்­பட்டுள்ள திட்டம். ஆனால் இது எமது மூலோபாயம் தந்திரோபாயத் திட்டம் அல்ல. ஏனெனில் அவ்வாறான மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய திட்டத்தை பகிரங்கப்படுத்தி விவாதிக்க முடியாது என்பதாலேயே....”

இந்தப் பந்தி அவர்களுக்கென்று இரகசியத் திட்டமும் திட்டமிட்ட வேலைமுறையும் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்க.

இதில் உள்ள ஐந்து தலைப்புகளில் முதலாவது ”பயங்கரவாத ஒழிப்புத் தேசியத் திட்டம்.” அதில்...

”...புலிப் பயங்கரவாதத்துக்கு காரணம் தமிழ் மக்களுக்குள்ள விசேடப் பிரச்சினை என்பதை நாங்கள் உறுதியாக நிராகரிக்கி­றோம்.... தமிழ் மக்களை வென்றெடுப்பதற்­கான ஒரேயொரு வழி சமஷ்டி அரசியல­மைப்பு என்பதையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். புலிகளை பேரின் மூலம் தோற்கடித்து குறைந்தபட்ச தீர்வுக்கு பணிய வைக்க முடியும் என்கின்ற போலித்தனமான கற்பனையிலும் நாங்கள் இல்லை. 1983இன் பின்னர் சிங்கள மக்களுக்­கெதிரான 127 தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். சொத்தக்களை நாசமாக்கியி­ருக்கின்றனர்...

போருக்குக் காரணம் புலிப் பயங்கரவா­தமே. புலிப் பயங்கர­வாதத்துக்கு அடிப்படை மிலேச்சத்­தனமே. அதற்கு வலுவூட்டியிருப்பது பாதாள உலகமே. புலிகளின் தலைவர் பாதாள உலகத்தின் வீரன். அவர்கள் நிதி பெறுவது ஆயுத மற்றும் போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்தின் மூலமே. அரசின் கவனமி­ன்மை காரணமாகவும் படையின் ஆயுதங்கள் பிலகளை அடைகின்றன. அது சிங்கள மக்க­ளின் பணம். அதை விட அரசின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள பலவீனம் காரணமா­கவும் புலிகள் அவ்வப்போது பலம் பெற்ற விடுகின்றனர். எனவே புலிப்பங்கரவாதத்­துக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெறுவது கட்டாயமாக உள்ளது. அதற்காக

- சிங்கள மக்களை யுத்தத்துக்கு பிரக்ஞையுடன் பங்குகொள்ளச் செய்வது.

-போர் வீரர்கள் சோர்வடையாமல் போரிடுவதற்காக உறுதிமிக்க கருத்தாக்கத்தை கட்டியெழுப்புவது.

-ஊழல்களில்லாத வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தம்வகையில் ஆயுதங்களை உற்பத்தி செய்வது.

-தமிழ் மக்களின் பிரச்சினை என்கின்ற ஐதீகத்துக்கு எதிரான கருத்தாக்கத்தை கட்டியெழுப்புவதனூடாக சர்வதேச சமூகத்தை வென்றெடுப்பது.

-ஈழம்வாத ஐதீகத்திலிருந்து தமிழ் மக்களை மீட்பது.”

என்கிறது. இரண்டாவது தலைப்­பான ”தேசத்திற்கான போர் இலக்கு” என்கின்ற பகுதியில் சாராம்சமாக

”...1. யுத்தத்துக்கு போதுமான பொருளாதார மற்றும் கருத்து நிலையை வளர்ப்பது. இதில் மக்களை பிரக்ஞைபூர்வ­மாக ஈடுபடுத்துவதற்கு மனித மற்றும் பொருள் வளங்களை பெறுவ­தற்காக அரச, தனியார், தொழில் நிலையங்கள் கல்வி நிலைய­ங்கள் என்பவற்றில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களை உருவாக்­குதல். அதனை பாதுகாப்பு துறையுடன் இணைத்து உளவுப் பணிகளிலும் பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்­ளல். இதில் அரசியல் தலையீடுகளை சேராது தடுத்தல்....”

இத் தலைப்பின்கீழ், கீழ் வரும் உப தலைப்புகளில் விரிவாக பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அத்தலைப்புகள்...

”..2. புலிப்பயங்கரவாதத்தை ஒழிக்கின்ற நோக்குடன் சகல அரசியற் கட்சிகள் மற்றும் நிறுவனங்களை தேசிய ரிதியில் ஒருங்கிணைத்தல்.

3. பாடசாலை கல்வித் திட்டத்தை தேசாபிமானத்தை வலியுறுத்தும் வகையில் சீர்திருத்தம் செய்தல்.

4. தேசாபிமானம் மற்றும் உண்­மையான பிரச்ஞையுணர்வை உயர்த்தும் நோக்குடன் கலை நிகழ்ச்சிகளை விரிவாக்குதல்.

5. சகல தொடர்புசாதன நிறுவனங்­களுக்கூடாக புலியெ­திர்ப்பு போராட்டத்துக்கான பிரச்சார நடவடிக்கை­களை மேற்கொள்­ளல்.

6. புலிகள் அமைப்புக்கு எதிரான சட்டத்தை மேலும் திருத்தி அதற்கு துணைபுரியும் சகலரை­யும் கைது செய்து அடக்குதல்.

7. தெற்குக்கு இடம்பெயரும் தமிழர்களின் பயங்கரவாத எதிர்ப்புணர்வை உறுதிப்படுத்துவது.

8. தமிழ் மக்களை இல்க்காகக் கொண்ட திட்டமிட்ட கல்வி மற்றம் பிரச்சார நிகழ்ச்சிகளை உருவாக்கல்.

9. தமிழ் சமூகத்துக்கு இடையூறாக செயற்படும் சகல தமிழ் அமைப்புக­ளையும் சட்டவிரோத அமைப்புகளாக்கி அவற்றினை நிராயுதபாணிகளாக்கி கைது செய்து தடுத்துவைத்தல்.

10. புலிப் பயங்காரவாதத்துக்கும் பிரிவினை­வாதத்துக்கும் எதிராக தமிழ் சமூகத்தை மையப்படுத்த உச்ச அளவு துணை செய்தல்.

11. முஸ்லிம் மக்களை பிரிவினைவாதத்தி­லிருந்து மீட்கின்ற வேலைத்திட்டத்தை பரவலாக்கல்....”

இதை விட ”போர்க்களத்துக்கு தேவை­யான அளவு போர்வீரர்கள்.” எனும் மூன்றா­வது தலைப்பின் கீழ் உள்ள உப தலைப்புகளை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்.

”1. யுத்தத்துக்கான யுத்த நிகழச்சி நிரலொன்றினை தயாரித்தல்.

2. படைவீரர்களின் தேசாபிமான உள நிலையை பலப்படுத்­தல்.

3. போர்வீரர்களின் உளநிலையை வீழ்த்து­கின்ற நிகழச்­சிகளை தடுத்து நிறுத்துவது.

4. சேருகின்ற சகல படையினருக்கும் போர்ப் பயிற்சிக்கு அப்பால் கல்வித் தரத்தையும் உயர்த்தல்.

5. பாதுகாப்புத் துறையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது.

6. படைக்கு ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்­கழகம், பாட­சாலை, இளைஞர் அமைப்பு­கள் என்பவற்றை இலக்காக வைத்த திட்டமிட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்­படுத்தல்.

7. சிவில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதிய பாதுகாப்பு பிரிவை ஆரம்பித்தல்.

8. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துதல் இதற்கு தமிழர் தாயக கோட்பாட்டை வலியுறுத்தும் எவரையும் அரசவிரோ­தியாகியாக்கி தண்டனையளித்தல்....” என்கின்றது.
நான்காவது தலைப்பான ”படையினருக்கு போதிய நவீன போர்த் தளபாடங்கள்” எனும் பகுதியின் உப தலைப்புகள் இவை...

1. ஆயுதம் தயாரித்தல்.

2. போர்த்தளபாடங்கள் பற்றிய ஆராய்ச்சி நிலையங்களை கட்டியெழுப்புதல்.

3. போர்த்தளபாடங்களை கொள்வனவு செய்வதை ஒழுங்காக திட்டமிடல்.
ஆகிய தலைப்புகளில் உள்ள­வற்றின் சாராம்சத்தில்..

”...இயலுமானவரை போர்த்தளபாடங்­களை உள்ளூரிலேயே தயாரிப்பது. அதற்கு தேவையான பயிற்சிகளை உள்ளூர் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய தயாரிப்பு­களை செய்தல். புதிய போர்க் கருவிகளை கண்டுபிடிப்ப­தற்கான ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி ஊக்குவித்­தல். போர்த் தளபாட கொள்வனவை தனியாருக்கு வழங்காமல் அரசே மேற்கொள்வது” போன்ற­வற்றை வலியுறுத்தியுள்ளது.

ஐந்தாவது தலைப்பான புலிப் பயங்கரவா­தத்துக்கு எதிரான உலக அபிப்பிராயம் எனும் தலைப்பில் எட்டு விடயங்கள் குறிப்பிடப்பட்­டுள்ளன அதில் சுருக்கமாக..

”...கடல், தரைமார்க்க பயங்கரவாத போக்குவர­த்தைத் தடுக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தல். ”திராவிடஸ்தான்” (“Dravizasthan”) அமைப்பதை எதிர்த்து பழைய ஆரிய தொடர்பை வலியுறுத்தி இந்தியாவுடன் உறவை பலப்படுத்தல். தென்னாசிய, கிழக்கு-தென்கிழக்கு ஆசிய பௌத்த நாடுகளில் பலிகளின் பொத்த எதிர்ப்பை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தல். புலிகளுக்கு ஆணுச­ரணையாக இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தல், மேற்குநாடுகள், அமெரிக்க அவுஸ்திரேலிய நாடுகளில் வாழும் சிங்கள மக்களை நிறுவனப்படுத்தி புலியெதிர்ப்பு நடவடிக்­கைகளுக்கு ஆதரவு திரட்டல். தமிழ் மக்களுக்கு பிரச்சினை உண்டு என நம்பிக்கொண்டிருக்கும் உலக நாடுகளை இலக்காகக் கொண்டு புலிப்பயங்கர­வாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளல். தேவையேற்படின் புலிகள் அமைப்புக்கு எதிராக வெளிநாடுகளில் ஆயுத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்...”

என குறிப்பிட்டுள்ள இந்த தேசியத் திட்டத்தின் இறுதியில்

”...அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு சக்தியென்றா­லும் புலிகளை உண்மையிலேயே தோற்கடிப்பதாயின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும். இதை விட வேறு வழியில்லை என நம்புகிறோம். இதனை தீர்ப்பதற்கு போலிப் பேச்சுவார்த்தைகள் மேலும் அழிவைத் தான் தரும். எனவே இதனை நடைமுறைப்படுத்தும்படி அனைவ­ரும் ஆணையி­டுவோம். தமிழ் இனவாதத்தை வேறோடு களைய எந்த துயர் வந்தபோதும், எந்த விலை கொடுத்தும், கருத்தியல் ரிதியாக, அரசியல் ரிதியாக, ஆயுத ரிதியாக முடிவுகட்கு கொண்டு வருவோம்...” என்கிறது.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all