Saturday, January 31, 2009

இலங்கையின் இனக் குழும அரசியல் சி.அ.சோதிலிங்கத்தின் நூல் பற்றிய விமர்சனக்கூட்டத்தில் என்.சரவணன் ஆற்றிய உரை


இன்று இந்தநூல் பொருத்தமான நேரத்தில் வெளியாகின்றது. சரிநிகரில் இது வெளிவந்த போது இக்கட்டுரைகள் எனக்கூடாகவே சோதிலிங்கம் அவர்கள் கொடுத்தனுப்புவார். இந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவம் குறித்து அப்போது நிறைய உரையாடியிருக்கிறோம். இந் நூலின் பலமே அதன் காலப்பொருத்தம் தான். மேலும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் சோதிலிங்கம் அவர்களுக்கு இருந்த தேசிய மற்றும் மார்க்சிய புரிதலும், அவற்றுடனான நேரடியாக இருந்த நடைமுறை அனுபவங்களும் தான். தேசிய விடுதலைப் போராட்டத்துடன் அவர்கொண்டிருந்த நேரடி ஈடுபாடு மற்றும் மாக்சிய புரிதலும் சமூகவியல் பார்வையுமாக இவருக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய பரந்துபட்ட பார்வையை வழங்கியிருக்கிறது. அதன் வெளிப்பாடுகளைத் தான் நாங்கள் அனுபவிக்கிறோம்.

இத்தொடாpன் முக்கியத்துவம் கருதி நான் இவருக்காக செய்த இணையத்தளமொன்றில் முழுக் கட்டுரையையும் உள்ளடக்கியிருக்கிறேன். ஆண்டாண்டு காலமாக எம்மை அடிமைப்படுத்த இந்த அரசியல் சட்டங்களுக்கூடாகத் தான் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை சட்டபூர்வமாக்கப்பட்டதன் பின் அதனை மறுப்பதும் எதிர்ப்பதும் குற்றத்துக்குரியதாகிவிடுகின்றது.

சுதந்திரத்திற்குப்பின்னர் யாப்புகளின் மூலம் எமது உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றையும், அதன்பின்னணியையும், அதன் பின்னால் இருந்த நலன்களையும், என்னஎன்னஏற்பாடுகளின் மூலம்அவை செய்யப்பட்டனஎன்பதையும் அவர் இங்கு தெளிவாக விளக்குகிறார். யாப்பு குறித்தவிடயத்தில் உள்ள தமித்தேசியப் பார்வை அவரது இந்தியா பற்றிய கட்டுரையில் மேலும்ஆழப்படுத்தியிருக்கலாம். இந்தியா எப்போதுமே தமிழ் மக்களின் எதிரி என்பதை நிரூபித்துவரும் நிலையில் அது கட்டயம்செய்யப்படவேண்டியவை. மேலும் அதனை செய்யக்கூடிய அரசியல் பார்வையையும் கொண்டிருப்பவர் சோதிலிங்கம் அவர்கள். வெளியாகியிருக்கும் அவரது இரு நூல்களிலுமே இருக்கின்ற முக்கிய வெற்றிஎன்னவென்றால் இது மாணவர்களுக்கான கல்விசார் தேவையை நிறைவேற்றும் அதேவேளை அரசியல் பிரக்ஞை மற்றும், தேடல், கொண்ட அனைவரையும் கூட திருப்திப்படுத்தக்கூடியது என்பது தான். நான் இவரிடம் படித்த காலத்தில் இவரிடம் இருந்து கல்விசார் தேவையை மட்டும் சவீகரித்துக்கொள்ளவில்லை. அரசியல் பார்வையையும் சுவீகரித்துக் கொண்டேன். அவரது பாடக்குறிப்புகள் அப்படித்தான் அமையும். அவர் உருவாக்கியிருக்கிற மாணவர்கள் பெரும்பாலும் போட்டிக்கல்விமுறைக்குள் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. அதற்கு அப்பால் சமூக அக்கறையுள்ள அரசியல் பிராணிகளாகவும் மாற்றிவிட்டிருக்கிறார் என்றால் அது மிகையாக இருக்காது.

இந்நூலின் உள்ளடக்கம் குறித்துஅதிகம் பேசுவதைவிட இதன் உருவகத்தின் கால அவசியம் அவசரம் குறித்து பேசுவதே அதி முக்கியம் என்று நினைக்கிறேன்.

இன்று நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும் சக்திகளுக்கு நாங்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி என்றோ அல்லது ஐக்கிய தசியக் கட்சியென்றோம் ஏதாவது ஒரு கட்சியின் பெயரை அழைப்போம், அல்லது சிங்கள பௌத்த அரசு என்று கூட நாங்கள் கடந்த காலங்களில் அழைத்து வந்திருக்கிறோம். ஆனால் அந்தப் பார்வை மிகவும் மேலோட்டமானது. மிக மிக மேலோட்டமானது.

அப்படியென்றால் இன்று ஆட்சி செய்வது யார்? ஒக்டோபர் 10குப் பின்னால் ஆட்சி செய்யப்போவது யார்? சந்திhpகாவா, ரணிலா டில்வினா இல்லவே இல்லை. பாசிசம். அது தான் கடந்த மூன்று வருடங்களாக ஆட்சி செய்துகொண்டிருப்பது. ஒக்டோரகுக்குப் பிறகும் ஆட்சி செய்யப்போவது.

இது மிகவும் கவனிக்க வேண்டிய விடயம். பாசிசம் பற்றிய அச்சுறுத்தலை நான் சரிநிகரில் நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதி வந்த போது அதனை ஒரு தமிழ் இனவாதக் குரலாகப் பார்த்தவர்கள் ஓரிரு வருடங்களின் பின்னர் தான் அதன் நேரடித் முகத்தை பார்க்கத் தொடங்கினார்கள். ஒப்புக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இன்றைய பாசசத்தின் நவ வடிவத்தையோ அல்லது அதன் மறுஉற்பத்தியையோ அவை பற்றிய சம்பவங்களையோ நான் அடுக்கப்போவதில்லை. அதற்கான அவகாசமும் இல்லை. அதற்கான முழுமையான களமும் இதுவல்ல. அது பற்றி நிறையவே சரிநிகரில் விரிவாக எழுதி வந்திக்கிறோம். ஆனால் அதன் சாராம்சம் பற்றிய புரிதலை விளங்கிக்கொள்கிற போது தான் சமகால யதார்த்தத்தையும், இந்த நூலின் முக்கியத்துவத்தையும் உணர முடியும்.

கிரெம்சி கூறுவார், பாசிஸ்டுகள் தங்களின் சக்தியையும், ஸ்தாபனத் திறமையையும் பறையடித்துக்காட்டடி ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு ஆதரவளிக்கும்படி செய்துவிடுவார்கள், அதிலும் மிதவாத ஆளும் வர்க்கத் தலைமை நம்பகத்தன்மையை இழந்து வருகிறதோ அல்லது ஸ்திரமற்றதான சூழல் உருவாகி வருகிறதோ, அந்த இடைவெளியை பாசிஸ்டுகள் கைபற்றிவிடுகிறார்கள், அந்த இடைவெளியை பாசிஸ்டுகள் நிரப்பிவிடுகிறார்கள். இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் குழப்பியடிக்கப்பட்டு பலவீனப்படும் போது பாசிசம் தலைதூக்கிவிடுகிறது என்பார் மேலும் அவர் இப்படிக் கூறுவார்.

-எப்போதெல்லாம் வளமான சிந்தனைகளும் ஜனநாயகத் தன்மைகளும் முடங்குகிறதோ எப்போதெல்லாம் முதலாளித்துவ தேசியவாதம் தன்னளவில் தோல்வியை தோல்வியை தழுவுகின்றதோ அப்போது பழமைவாதம் பாசிசத்துக்கான தளத்தை உருவாக்கிக்கொள்கிறது. என்பார்.

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் கநற்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக்கட்ட பாசசத்தின் வளர்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டுவருகின்ற இயக்கம்.

தேசியத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப்பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகுமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லர் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன்தான் தன்னை அடையாளப்படுத்தியது. இன்று சிறி லங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்தமும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத்துறைக்கான சேவலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழமையாக தமது கட்டுப்பாடடுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துரவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுறுவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக்கொண்டது லங்காதீப, சண்டே டைமஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வுகொண்டவர்களை அடையாளம்கண்டு தமது வலைக்குள் சிக்கவைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுறுவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகுளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத்தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலைவாய்ப்பு அணி, என பல அமைப்புகளஷளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர்வட்டார சகத்களை குறகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பொpய அதிகாரிகள் பலரையும் இணைத்துக்கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்திவருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

முன்னரெல்லாம் பல பெயர்களைக்கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அணைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்புவடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசயில் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியதகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறிவந்தோம். அதற்கு இராணுவு வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திள் உர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன.

உங்களுக்குத் தொpயும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான n‘லருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக்கொண்டிருப்பதை அறிந்திப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டுவருகிறார்கள். வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கணட இந்த செய்தி ஏட்டின் கடந்த பெப்ரவரி இதழில் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. கொழும்பில் இருந்துகொண்டு கொஞச்ம் கூட அச்சமின்றி புலிக்குத் வால்பிடித்துக்கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியா நபரால் புதைகுழிக்கு அனுப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதையே நம்மெல்லாருக்கும் தைரியமளிக்கின்றது.

என்று இருந்தது அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு iதாpயத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய வியம் என்னவென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இருதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National Front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளன.

கடந்த 10ஆம் திகதி லக்பிம பத்திhpகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்தம குறகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்ருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்க்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று அடபிரி செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி எனட்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப்புள்ளியைத் தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயதப் புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாபமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. தமிழ் கட்சிகள் மகா சங்கத்தினருடன் பேசி தீர்வு தொடர்பாக ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரத்னசிறி வக்கிரமநாயக்க கூறியது யாரது வெற்றி. இந்த நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். இதற்குப் பின்னால் முதலாளித்துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக்கொள்கிறது. சிங்கள வீரவிதான இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேளை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடை பாசசத்துக்குரியவை என்பதை நினைவிற்கொள்வோம். இனி பாசிசத்துடனான கொடுக்கள் வாங்கல்களை செய்துகொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்புகொள்ளமுடியாது.

வரப்போகும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்குப் பின் நாட்டின் நிலைமை மிகமிக மோசமடையப் போகிறது. திறைசேரியில் பணம் இல்லை என உத்தியோக பூர்வ அறிவித்தலும் வெளியாகிவிட்டது. எந்தநேரத்திலும் வெடிக்கக்கூடிய பண நெருக்கடியும், பஞ்சமும். தேர்தலுக்காக வெடிக்க விடாமல் அதிக முயற்சிசெய்து கொண்டிருக்கிறது அரசு. 94ஐப் போலல்லாது இம்முறை குறைந்த வித்தியாசத்தில் தான் அரசாங்கம் வெல்லும். பாசிசத்தல் தங்கியிருப்பது மேலும் உறுதிப்படும். தேர்தல் முடிந்ததும் அது வெடிப்பது பற்றி அரசுக்கு கவலை இல்லை. அவ்வாறு எதிரி நெருக்கடிக்குள் சிக்குகின்ற சந்தர்ப்பமானது போராட்டத்துக்கு சாதகமான அம்சம். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போராட்ட சக்திகள் அரசை மேலும் பலவீனப்படுத்த முயற்சிப்பர். அந்த முயற்சிகளை எதிர்த்து பாசிசம் அரசை நிர்ப்பந்நித்pகும். ஆனால் தேர்தலுக்காக குவித்திருக்கின்ற ஆயுததளபாடக் குவிப்புகள் மட்டும் தான் அரசின் கையிருப்பில் இருக்கும். அதன் பின்னர் இருப்பதை வைத்துக்கொண்டு தான் அரசு போருக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் அந்தகைய சூழலில் பாசிசமயப்பட்டுவரும் மக்களை திருப்திபடுத்த அரசு எண்ணிக்கைகளை காட்டவேண்டிவரும். அதற்கு தமிழ் மக்களின் மதான குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகள், கைதுகள் என்றெல்லாம் செய்து தான் பாசிசத்தை திருப்திபடுத்த முடியும். போராட்டம் அடுத்த கட்டத்தை நெருங்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்மக்களுக்கு ஆதரவளிப்பதைக் காட்டிலும், சிறிலங்கா அரசுக்கு இந்திய மற்றும், ஏனைய வல்லரசு நாடுகள் உதவி வழங்க முயலும். எனவே தமிழ் தேச விடுதலையில் பிரக்ஞை உள்ள சக்திகள் தேசத்துக்குள் இது பற்றிய விழிப்பூட்டவும், எச்சரிக்கவுமான வேலையை தொடங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தேசத்துக்கு வெளியில் எதிரிக்கு ஆதரவாக சர்வதேச சக்திகள் போக விடாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டாக வேண்டி வரும்.

இன்று வடக்கில் இந்திய ஹெலிகப்டர்கள், படகுகள், ஆயுதங்கள் என குவிக்கப்பட்டுத் தான் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீரவிதானவுடன் இந்திய உளவுப்பிரிவு நெருங்கிய உறவுகளை வைத்துக் கொண்டிருப்பதாககிடைக்கின்ற செய்திகள் பீதியடையச் செய்கின்றன. இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக்கோரி இலங்கை அரசுக்கு முன்னரே வீரவிதான கோருகிறது. இந்தியா வழங்குகிறது. சம்பிக்க ரணவக்க இந்தியா சென்று வருகிறார் பயிற்சிகள் வழ்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். அந்தப் பயணத்தின் பின் இராணுவ உயர்அதிகாரிகள் இந்தியா சென்று வெற்றியுடன் திரும்பியிருப்பதாக அறிக்கை வெளியிடுகிறார்கள். இந்த நிலைமைகள் எல்லாம் எமக்குவிளக்கும் செய்திகள் பல.

இப்படிப்பட்ட சூழலின் பொருத்தப்பாட்டை விளங்கிக்கொண்டு வெளியாகும் நூல் தான் இது.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all